×

3 குழந்தைகளின் தாய் மாயம்

விராலிமலை, நவ.15: விராலிமலை  அருகே 3 குழந்தைகளின் தாய் மாயமானார். இதுகுறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விராலிமலை அருகே உள்ள பொத்தபட்டியை சேர்ந்தவர் கனகராஜ் மனைவி லோகாம்பாள் (31). இவர்களுக்கு 2 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 5ம்தேதி மணப்பாறைக்கு செல்வதாக வீட்டை விட்டு சென்றவர் திரும்பிவரவில்லை. அவரை உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது கணவர் கனகராஜ் விராலிமலை  போலீசில் கொடுத்த புகார் மனுவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான  பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags : children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...