×

திருமண ஆசை காட்டி இளம்பெண் பலாத்காரம் தொழிலாளி கைது

செம்பட்டி, நவ. 14: நிலக்கோட்டை அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா ஒரு கிராமத்தை சேர்ந்த  இளம்பெண் ஒருவர் நிலக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த உறவினர் வீட்டில் தங்கி ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அப்போது வேலை பார்த்த இடத்தில் இவருக்கும், அய்யம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

சில நாட்களுக்கு முன் 2 பேரும் மதுரைக்கு சென்று அங்குள்ள ஒரு விடுதியில் தங்கினர். அங்கு திருமணம் செய்து கொள்வதாக கூறி கார்த்திக் இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள கார்த்திக் மறுப்பதாக கூறி இளம்பெண் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேபி வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர். தொடர்ந்து  அவரை நிலக்கோட்டை மாஸ்திரேட் ரிஸ்னாபர்வீன் முன்னிலையில் ஆஜர்படுத்தி 15 நாள் சிறைக்காவலில் அடைத்தனர்.

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்