×

மரக்கன்று நடும் விழா

உடன்குடி,நவ.14: உடன்குடி ஒன்றிய பாரதமாதா சேவா சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழாகந்தபுரம், நயினார்பத்து, நேசபுரம், கலியன்விளை, வெங்கட்ராமானுஜபுரம் உள்ளிட்ட பத்து கிராமங்களில் நடந்தது. தொடர்ந்து கிராமங்களில் மரங்களை பராமரிப்பதற்கும், வளர்ப்பதற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மரம் வளர்த்தலால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கமளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை பாரதமாதா சேவா சங்க நிர்வாகிகள் சேர்மலிங்கம், பிரபாகர், வேல்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Planting Festival ,
× RELATED நீடாமங்கலம் ரிஷியூரில் பாரம்பரிய பூங்கார் நெல் நடவு திருவிழா