×

மூதாட்டியிடம் 3 பவுன் பறிப்பு

சிங்கம்புணரி, நவ. 8: சிங்கம்புணரி அருகே புதூர் ஒன்றியம் அய்யாபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி நல்லாயி(60). இவர் தனது வீட்டின் அருகே உள்ள கண்மாய்கரையில் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 3 பேர் நல்லாயியை தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி செயின் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...