கறம்பக்குடி அக். 16: கறம்பக்குடி தாலுகாவில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் திமுகவினர் அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வாக்காளர் சேர்ப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்ததை அடுத்து கறம்பக்குடி வடக்கு ஒன்றியம் நகர கழகம் சார்பில் கறம்பக்குடி பேரூராட்சியில் உள்ள தென்னகர் , செங்கமலம் , சுலைமான் நகர் , புலியஞ்சோலை ஆகிய வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் கறம்பக்குடி திமுக வடக்கு ஒன்றியத்தில் உள்ள ராங்கியன்விடுதி , பிலாவிடுதி , அம்புக்கோவில் , மைலன்கோன்ப்பட்டி , மறுதன்கோன்விடுதி , வாண்டான்விடு–்தி , ரெகுநாதபுரம் , கீராத்தூர் , தட்டாமனைப்பட்டி , பாப்பாப்பட்டி , காடம்பட்டி , மணமடை , செங்கமேடு ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
இதனை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா , திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் , நகர கழக செயலாளர் முருகேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் அதேபோல் கறம்பக்குடி திமுக தெற்கு ஒன்றியத்தில் உள்ள மழையூர் , பல்லவராயன்பத்தை , தீத்தானிப்பட்டி , எம் தெற்குத்தெரு , மாங்கோட்டை , களபம் மற்றும் அனைத்து ஊராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாமை கறம்பக்குடி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தவ பாஞ்சாலன் மாநில திமுக தொண்டர் அணி துணை அமைப்பாளர் சுப சரவணன் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எம் எம் பாலு , மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மழையூர் ராமசாமி , மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பரிமளம் , ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் குபேந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் இவர்களுடன் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய , நகர , தெற்கு ஒன்றிய திமுக மாவட்ட ஒன்றிய நகர ,கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.