×

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேருக்கு வலை

செங்கல்பட்டு, அக். 16: செங்கல்பட்டு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை தேடி வருகின்றனர்.செங்கல்பட்டு மக்கான் சந்து, சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி, பாமாயில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக செங்கல்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அப்பகுதியில் நேற்று முன்
தினம் மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த சகிலா, சபி ஆகிய இருவர் வீடுகளில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி மூட்டைகள், 100 பாமாயில் பாக்கெட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் வருவதை அறிந்து சகிலா, சபி ஆகியோர் தப்பியோடியதும் தெரியவந்தது. பின்னர் அந்த ரேஷன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, செங்கல்பட்டு அரசு குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.
எந்தெந்த ரேஷன் கடைகளில் இருந்து இவற்றை வாங்கினர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யார் என வட்ட வழங்கல் அலுவலர் விசாரித்து வருகிறார். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்