×

நோயாளிகள் கடும் அவதி கறம்பக்குடியில் உலக மனநல விழிப்புணர்வு பேரணி

கறம்பக்குடி, அக். 12: ஸ்கார்ப் இந்தியா நிறுவனம் மூலம் கறம்பக்குடி ஸ்கார்ப் இந்தியா நிறுவன அமைப்பு வட்டார கிளை சார்பில் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் உலக மனநல விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். கறம்பக்குடி சீனிக்கடை முக்கம், அம்புக்கோவில் முக்கம், உள்கடைவீதி, மீன் மார்க்கெட் வழியாக பள்ளியை பேரணி அடைந்தது. ஸ்கார்ப் இந்தியா நிறுவன மனநல அமைப்பு கறம்பக்குடி வட்டார ஒருங்கிணைப்பாளர் குணசெல்வி சிறப்புரையாற்றினார். பேரணியில் ஆசிரியர்ளக், மாணவர்கள், வட்டார பணியாளர்கள் பங்கேற்றனர். கள பணியாளர் முருகேஸ்வரி நன்றி கூறினார். அதேபோல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மனநோய் விழிப்புணர்வு நாடகம் நடந்தது. நிகழ்ச்சியில் சமுதாய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். வாழ்வாதார ஒருங்கிணைப்பாளர் சேகர், ஸ்கார்ப் நிறுவன கறம்பக்குடி வட்டார கள பணியாளர்கள் ராஜேஸ்வரி, அம்பிகா, ஜோதி, புவனேஸ்வரி, சத்யா, சிவரஞ்சனி, தனலட்சுமி, ஜெயந்தி, சித்ரா மற்றும் மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். கள பணியாளர் சமனசுமேரி நன்றி கூறினார்.

Tags : World Mental Awareness Parade ,
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா