×

சாலை விபத்தில் பெண் பலி


ஆலங்குடி, அக்.12: ஆலங்குடி அருகே நாய் குறுக்கே வந்ததால் டூவீலரில் இருந்து கீழே விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார். ஆலங்குடி அடுத்த திருநாளுர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் பாக்கியம் (55). இவர் நேற்று தனது மருமகன் பாலசுப்பிரமணியனுடன் சொந்த வேலையாக ஆலங்குடிக்கு டூவீலரில் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார். கரும்பிரான்கோட்டையில் நாய் குறுக்கே சாலையில் ஓடிவந்து டூவீலரில் விழுந்ததில், நிலைதடுமாறி டூவீலர் கீழே விழுந்தது. இந்த விபத்தில் பாக்கியத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : road crash ,
× RELATED சாலை விபத்தில் மூளைச்சாவு...