×

நாகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்

நாகை,அக்.12: நாகை மாவட்டத்தில் ரேஷன் குறைதீர் கூட்டம் நாளை (13ம் தேதி) நடக்கிறது என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.  இது குறித்து நாகை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான மக்கள் குறைதீர் நாள் முகாம் நாளை (13ம் தேதி) காலை 10 மணி முதல் 1 வரை நாகை தாலுகா ஆபரணதாரி கிராமத்திலும், திருக்குவளை தாலுகா திருவாய்மூர் கிராமத்திலும், வேதாரண்யம் தாலுகா செம்போடை கிராமத்திலும்,  மயிலாடுதுறை தாலுகா மொழையூர் கிராத்திலும், தரங்கம்பாடி தாலுகா நல்லடை கிராமத்திலும்.  சிர்காழி தாலுகா கீழவாடி கிராமத்திலும், குத்தாலம் தாலுகா காஞ்சிவாய் கிராமத்திலும்,  கீழ்வேளூர் தாலுகா எரவாஞ்சேரி கிராமத்திலும் நடைபெறுகிறது. குறைதீர் நாள் முகாம் நடைபெறும் கிராமங்களில் பொதுமக்கள் அனைவரும் தங்களது நியாய விலைக்கடை சம்பந்தமான புகார்கள் மற்றும் குடும்ப அட்டை தொடர்பான பெயர் நீக்கல், சேர்த்தல், கடை மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை மனு மூலமாக வழங்கி தீர்வு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : rally meeting ,Nagapattinam district ,
× RELATED பெண் போலீசுடன் தனிமையில் இருந்த...