×

பெரியகுளம் அருகே தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

பெரியகுளம், அக்.12: பெரியகுளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலியானார். பெரியகுளம் அருகே கைலாசபட்டி சேர்ந்தவர் போதராஜ் மகன் அமுதவாணன்(32). இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், ஒரு பெண்குழந்தையும் உள்ளனர். இவர்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு கைலாசபட்டியிலேயே உள்ளது. நேற்று காலை தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்ற அமுதவாணன் கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். நீச்சல் தெரியாது என்பதால் கிணற்றில் விழுந்த அமுதவாணன் நீரில் முழ்கி உயிரிழந்தார்.

தகவலறிந்த பெரியகுளம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்த காரணத்தால் தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேர தேடுதலுக்குப் பின்னர் இறந்தவரின் உடலை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றர்.

Tags : garden ,Periyakulam ,
× RELATED மலர் கண்காட்சிக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா: அலங்கார பணி தீவிரம்