அரியலூர்,அக். 9: அரியலூர் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் பெண்களை சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கூடாது என கூட்டுப்பிரத்தனை செய்து கோரிக்கை வைக்கப்பட்டது.
சமீபத்தில் சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களை சுவாமி தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அரியலூர் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மறுபரிசீலினை செய்ய வேண்டும், சபரிமலையின் புனித தன்மையை பாதுகாக்க வேண்டும், இத்தீர்ப்பு ஐயப்ப பக்தர்களுக்கு மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளது. எனவே உச்ச நீதிமன்றம் இத் தீர்ப்பினை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.