காங்கயம், அக்.5: காங்கயம் பகுதியில் நேற்று காலை முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் தேங்காய் களங்களில் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டன.கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் நேற்று காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் காங்கயம் குண்டடம் பகுதியில் செயல்பட்டு வரும் சுமார் 500க்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே, உடைத்து காயவைத்த பருப்பும் மழைகாரணமாக தார்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர். வரும் நாட்களில் மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் தேங்காய் கள பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் என தேங்காய் கள உரிமையாளர்கள் கூறினர்.