×

சாலையில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த வேன்

சிவகங்கை, செப். 25: சிவகங்கையில் சாலையில் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காளையார்கோவிலை சேர்ந்தவர் செல்வராஜ்(55). இவர் நூத்தண்கண்மாய் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் நேற்று மாலை ஆம்னி வேனில் மதுரைக்கு சென்றார். வேனை செல்வராஜ் ஓட்டி சென்றார். சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் உள்ள சிக்னல் அருகே இவர் திரும்பும் பொது வேனின் கீழ்பகுதியில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. செல்வராஜ் வேனில் இருந்து வெளியேற முயற்சித்தார். அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் வெளியேர முடியாமல் தவித்தார். இதையடுத்து செல்வராஜை அப்பகுதியில் நின்றிருந்த போக்குவரது போலீசார் சீட் பெல்ட்டை அவிழ்த்து மீட்டனர். சிவகங்கை தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் வருவதற்குள் வேன் முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். ஆனால் வேன் முற்றிலும் எரிந்து சேதமாகியது. தீயால் அங்கு போலீஸ் நிழற்குடை பகுதியில் இருந்த பலகை எரிந்தது. அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவும் சேதம் அடைந்தது. உடன் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டது.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...