×

அங்கன்வாடி ஊழியரை நியமிக்க கோரி தாயுடன் வந்து மனு அளித்த மாணவன்

சிவகங்கை, செப். 25: காளையார்கோவில் அருகே மாடக்கோட்டை அங்கன்வாடியில் ஊழியரை நியமிக்க கோரி அங்கு படிக்கும் மாணவர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார். மாடக்கோட்டையை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் குமரகுரு(3), தனது தாய் மேலாவுடன் வந்து அளித்த மனுவில், மாடக்கோட்டையில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறேன். அங்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊழியர்கள் யாரும் இல்லை. இதனால் யாரும் எனக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை. தினமும் அங்கன்வாடி வாசலில் சென்று அமர்ந்து விட்டு வருகிறேன். உணவும் அளிப்பதில்லை. எனக்கு படிக்க ஆசையாக உள்ளது. எனது கோரிக்கையை ஏற்று உடனடியாக அங்கன்வாடியில் பணியாளர் நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு