அறந்தாங்கி, செப். 21: அறந்தாங்கி அருகே பூவை மாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் திறந்தவெளியில் மலம் கழித்தல் கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பள்ளியின் தலைமையாசிரியர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற பேரணியை பள்ளியின் பெற்றோர் கழக பொருளாளர் மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் காந்தி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.பேரணி பூவைமாநகர் அரசுமேல்நிலைப்பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக ஆவணத்தான்கோட்டை கடைவீதி வழியாக சென்று மீண்டும் பூவைமாநகர் பள்ளியை வந்தடைந்தது.
பேரணியில் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீட்டில் கழிவறை கட்டுதல், திறந்தவெளியில் மலம் கழித்தல் கூடாது என்பதை வலியுறுத்தும் கோஷங்களை எழுப்பியும் துண்டு பிரசுரங்களை கொடுத்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரணியில் பள்ளியின் ஆசிரியர்கள் வெள்ளைச்சாமி, தெய்வேந்திரன், மான்விழி மல்லிகா, குமார், மணி, கண்ணன், சுப்பிரமணியன், நித்யா, பழனியப்பன், சண்முகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேரணியை வழி நடத்தினர்.