×

எஸ்பி அலுவலகத்தில் புகார் ஆலங்குடி அருகே மதுபாட்டில் கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

ஆலங்குடி, செப். 19:   ஆலங்குடி அருகே மதுபாட்டில் கடத்தி வந்த வாலிபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் நால்ரோடு பகுதியில் சிலர் வெளிமாநில மதுபானங்களை கடத்தி சென்று விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்குடி- புதுக்கோட்டை சாலை கோவிலூர் நால்ரோடு பகுதியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நீலகண்டன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆலங்குடி கேவிஎஸ் தெருவை சேர்ந்த மகன் பாலு (33) ஆம்னி வேனில் மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 672 மதுபாட்டில் மற்றும் ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து எஸ்பி பரிந்துரையின்பேரில் கலெக்டர் கணேஷ் உத்தரவின்படி பாலுவை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.



Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ