×

கருணாநிதி மறைவால் அதிர்ச்சி மரணமடைந்த திமுக பிரமுகர்கள் 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கல்

புதுக்கோட்டை,செப்.19:  கருணாநிதி மறைவை கேட்டு அதிர்ச்சியில் மரணமடைந்த திருவரங்குளம் திமுக பிரமுகர் பெரியையா, பழனியம்மாள் ஆகியோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியை எம்எல்ஏ ரகுபதி வழங்கினார்.கருணாநிதி மறைவால் அதிர்ச்சியில் மரணமடைந்த கட்சியினருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் திமுக பிரமுகர்கள் பெரியையா, பழனியம்மாள் ஆகியோர் கருணாநிதி மறைவால் அதிர்ச்சி மரணமடைந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி எம்எல்ஏ வழங்கினார். அப்போது எம்எல்ஏ மெய்யநாதன், ஒன்றிய செயலாளர் தங்கமணி, ஆறுமுகம் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.


Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ