×

திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டி, செப். 19:  தமிழக அரசை கண்டித்தும், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தமிழக அமைச்சர்கள் மற்றும் டிஜிபி., உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி ஊட்டியில் திமுக., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊட்டியில் உள்ள ஐந்து லாந்தர் பகுதியில் நடந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். தலைமை தேர்தல் பணிக்குழு  செயலாளர் ராமசந்திரன், கூடலூர் எம்எல்ஏ., திராவிடமணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, பாண்டியராஜ், ராஜூ, இளங்கோ, செந்தில், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொன்தோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 அதிமுக., அரசை கண்டித்தும், அமைச்சர்கள், டிஜிபி., ஆகியோர் பதவி விலக கோரி பதவி விலக கோரி கண்டன கோஷங்கள் எழுப்பட்டன.
ஆர்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் லியாகத்அலி, பரமசிவன், நெல்லை கண்ணன், சிவானந்த ராஜா, சிவகுமார், பிரேம்குமார், உதயதேவன், நகர செயலாளர்கள் ராமசாமி, ஜார்ஜ், காசிலிங்கம், ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, கண்ணன், கருப்பையா, சதக்கத்துல்லா, வெங்கடேஷ், ராஜா, செல்வம் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சிவகுமார், ஜெயகுமாரி, ஆனந்தன், கர்ணன், மயில்வாகனம், காந்தல் ரவி, எல்கில்ரவி, சின்னவர், ஆலன், தேவராஜ், செல்வராஜ், ரெணால்டு வின்சென்ட், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாபு, நவ்புல், நாகராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் மோகன்குமார், ராஜா, செல்வம் உட்பட திமுக.,வினர் பலர் கலந்துக் கொண்டனர். துணை செயலளார் ரவிகுமார் நன்றி கூறினார்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு