×

வீடுகளில் 60 பவுன் கொள்ளை

மதுரை, ஆக. 15: மதுரை காந்தி  நகரை சேர்ந்தவர் கணபதி (67). ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் பொறியாளர். இவர்  சில தினங்களுக்கு முன்பு மதுரை அருகே வாகைக்குளத்தில் உள்ள மகள் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது, கேட் மற்றும் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே பீரோவில் வைத்திருந்த 57 பவுன் நகை, கால் கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து கூடல்புதூர் போலீசில் கணபதி புகார் அளித்தார்.

இதுபோல் மதுரை அருகே எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்தவர் சம்பத்குமார் (65). எல்ஐசி ஏஜென்ட். இவர் கடந்த 20 தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றவர். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த மூன்றரை பவுன் தங்க நாணயங்கள், 100 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பேரையூர் அருகே கனமழைக்கு 6 ஏக்கர் வாழைகள் நாசம்: விவசாயிகள் வேதனை