×

ஆக. 30ல் நடக்கிறது கருணாநிதி மறைவுக்கு இரங்கல் புதுகையில் 16ல் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

புதுக்கோட்டை, ஆக. 14: புதுக்கோட்டையில் வரும் 16ம் தேதி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ ரகுபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 16ம் தேதி(வியாழன்) மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பொன்துரை,

வடக்கு மாவட்ட அவைத் தலைவர் மாரி அய்யா ஆகியோர் தலைமையில் மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள கீரை தமிழ்செல்வன் அவைக்கூடத்தில்  நடைபெறுகிறது. கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. எனவே கூட்டத்தில் தெற்கு, வடக்கு மாவட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ