×

ஆலங்குடியில் கரும்புலோடு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்தது

ஆலங்குடி, ஆக.14:  ஆலங்குடியில் கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்தது. ஆலங்குடி அருகேயுள்ள நம்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். விவசாயி. இவருடைய தோட்டத்தில் இருந்து, குரும்பூர் சர்க்கரை ஆலைக்கு டிராக்டர் டிப்பரில் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். டிராக்டரை அதே ஊரை சேர்ந்த கணேசன் மகன் குமார் (25) என்பவர் ஓட்டி வந்தார். ஆலங்குடி அரசமரம் பகுதியில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கரும்பு லோடு கவிழ்ந்தது.

மேலும், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த டூவீலர் மீதும் மோதியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி போலீசார், ஜேசிபி மற்றும் கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் சாலையில் கொட்டிக்கிடந்த கரும்புகளையும், டிராக்டர் டிப்பரையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.  இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா