சாத்தூர், ஆக. 14: சாத்தூர் அருகே, ஒத்தையால் கிராமத்தில் சாத்தூர் தாலுகா காவல்நிலைய எஸ்ஐ ரொங்கராஜன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, ஒத்தையால் கிராமத்தில் காளியம்மன் கோயில் அருகே, மரத்தடியில் அனுமதியின்றி மது விற்ற கிரில்ஜோவுப் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.