விருத்தாசலம், ஆக. 14: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் திருச்செல்வம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாத்துக்குடல் ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் இளையராஜா (36), சக்திவேல் மகன் உத்திராபதி (20), சின்னசாமி மகன் முருகேசன் (40) ஆகிய 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடமிருந்த பணம் மற்றும் சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.