×

செங்கோட்டையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி

செங்கோட்டை, ஆக.13:  செங்கோட்டை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்கோட்டை அரசு  மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஸ்கண்ணா தலைமை வகித்தார். டாக்டர் இந்துமதி, தலைமைசெவிலியர் ரோஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வக நுட்பநர் ஹரிஹரநாராயணன் வரவேற்று பேசினார். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது . நிகழ்ச்சியில் ஹரிஹரன் ஹோட்டல் உரிமையாளர் மாடசாமி, மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆற்றுப்படுத்துனர் வினிபாரதி நன்றி கூறினார்.



Tags :
× RELATED 2 கோயில்களில் நகை பணம் கொள்ளை