×

வேப்பலோடை அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்கள் கலந்துரையாடல் கூட்டம்

குளத்தூர், ஆக. 13: குளத்தூர்  அருகே உள்ள வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர், ஆசிரியர்கள்  கழக கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் சேகர்  தலைமை வகித்தார். அன்னை தெரசா கிராம பொதுநலச்சங்க செயலாளர் ஜேம்ஸ்அமிர்தராஜ்,  பொருளாளர் முத்துகிருஷ்ணன், செல்வம், கருப்பசாமி, கணேசன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை புளோரிடா வரவேற்றார்.

மாவட்ட இடைநிலை கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், சங்கரநாராயணன் ஆகியோர்  பேசினர். பட்டிமன்ற பேச்சாளர் சங்கரலிங்கம் பெற்றோர், ஆசிரியர் இணைந்து  செயல்படும்போது மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசினார்.  
தொடர்ந்து மாணவர்கள், அவர்களது பெற்றோர், வகுப்பு ஆசிரியர்கள் என  தனித்தனியாக கலந்துரையாடல் நடந்தது. ஆசிரியை கிரேஸ்லின் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


Tags :
× RELATED மானூர் அருகே வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு