×

மது போதையில் வாங்கிய கடனை கேட்ட தொழிலாளி கொலை

கோவை, ஆக.7:  பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அகிலேஷ்குமார்(23), அகிலேஷ் (26).  நண்பர்களான இவர்கள்  இருவரும் இரண்டு ஆண்டிற்கு முன் பீகாரில் இருந்து வேலை தேடி கோவை வந்தனர்.கட்டட தொழில் செய்து வந்தனர். நரசிம்மநாயக்கன்பாளையம் அருகேயுள்ள ராஜேந்திரா நகரில் பிரபு என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். நேற்று முன் தினம் இவர்கள் இருவரும் வீட்டில் மது குடித்தனர். மது போதையில் இருந்த அகிலேஷ்குமார், தான் கடனாக கொடுத்த 3 ஆயிரம் ரூபாயை திருப்பி கேட்டார். அப்போது அகிலேஷ், இப்போது என்னிடம் பணமில்லை எனக்கூறியுள்ளார். இதில் கோபமடைந்த அகிலேஷ், வீட்டில் இருந்த கத்தியால் அகிலேஷ்குமாரை குத்தினார்.  வலது மார்பில் கத்தி குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் விழுந்த அவர் இறந்தார். போதையில் கொலை செய்த அகிலேஷ், சொந்த ஊருக்கு ரயிலில் தப்பி செல்ல முயன்றார்.  அக்கம் பக்கத்தினர் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அகிலேஷ் கோவை ரயில் நிலையம் செல்லும் முன் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை