×

அரசு பேருந்து மோதி மகன் கண் முன் தாய் பரிதாப பலி

ஆலந்தூர்: துரைப்பாக்கம் மேட்டுக் குப்பம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் தாயார் ஜெயா(42). உடல் நலக் குறைவு காரணமாக பார்த்திபன் தனது தாயாரை சிகிச்சைக்காக கே.கே.நகரில உள்ள அரசு மருத்துவமனைக்கு தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.  ஆசர்கானா வளைவு அருகே  திரும்பும் போது பின்னால் வந்த  அரசு பேருந்து பைக் மீது மோதியது. இதில், மகன் பார்த்திபன் கண்முன்னே பேருந்தின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி ஜெயா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன வோட்டிகள் பேருந்தின் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்  அங்கு வந்து ஜெயா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Mother tragically died in front of her son when she was hit by a government bus
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...