சென்னை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. 75 நாட்களுக்குகள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மதுரையில் திருமங்கலம்-ஒத்தக்கடை வேளாண் கல்லூரி வரை 31.கி.மீ தூரம் வரை மெட்ரோ ரயில் விட திட்டமிட்டுள்ளனர். சாத்தியக்கூறு அறிக்கை தயாரான நிலையில் விரிவான திட்ட அறிக்கை தயாராகி ஒப்புதல் கிடைத்தவுடன் பனித்துவங்கும் என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ இரயில் வெற்றிகர திட்டத்தை தொடர்ந்து மதுரை மாநகரிலும் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்க்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகராக ஒப்பந்தத்தை ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு நேற்று (28.03.2023) வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான கூட்டம் இன்று (29.03.2023) சென்னை நந்தனதில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் த.அர்ச்சுனன் (திட்டங்கள்) தலைமை தாங்கினார். இக்கூட்டத்தின் போது திட்ட இயக்குனர், இந்த விரிவான திட்ட அறிக்கை 75 நாள் காலக்கெடுவுக்குள் தயாரிக்கப்பட்டு முடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டோன் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ரேகா பிரகாஷ் (திட்ட வடிவமைப்பு), ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் & கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் பிரிதிநிதிகள் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் உடனிருந்தனர். விரைவில் மதுரையில் பங்குதாரர்கள் கூட்டம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், தலைமையில் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.