×

தொகுதி பார்வையாளர்களுடன் 31ம் தேதி ஆலோசனை கூட்டம்: திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் வரும் 31ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இக்கூட்டத்தில் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி, பூத் கமிட்டி அமைப்பு, புதிய உறுப்பினர் சேர்த்தல் ஆகிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்குவார்.

Tags : DMK , Consultation meeting with constituency observers on 31st: DMK leadership announcement
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...