புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.15,000ல் இருந்து ரூ.18,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 122 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படுவதன் மூலம் 1,500 பேர் பயன்பெறுவர். மேலும் 716 ஊழியர்கள், 10 மாதங்கள் பணிபுரிந்தவர்களும் பணியில் சேர்க்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.