இந்திய கிரிக்கெட் அணியின் 2022-2023 ம் ஆண்டிற்கான புதிய வீரர்கள் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஒப்பந்தமானது, அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை இருக்கும் என அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. வீரர்களின் திறமைக்கு ஏற்ப அவர்கள் ஏ ப்ளஸ், ஏ, பி, சி என நான்கு பிரிவுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவர்களுக்கு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெறும் இந்திய வீரர்களுக்கு ரூ.7 கோடி ஊதியம் நிர்ணயம். ஏ பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊதியம். பி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊதியம், சி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.1கோடி ஊதியம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ ப்ளஸ் பிரிவு
* கேப்டன் ரோஹித் சர்மா
* விராட் கோலி
* ஜஸ்பிரித் பூம்ரா
* ரவீந்திர ஜடேஜா
ஏ பிரிவு
* ஹர்த்திக் பாண்ட்யா
* ரவிச்சந்திரன் அஸ்வின்
* முகமது ஷமி
* ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட்
* அக்சர் படேல்
பி பிரிவு
* புஜாரா
* கே.எல்.ராகுல்
* ஷ்ரேயஸ் ஐயர்
* முகமது சிராஜ்
* சூர்யகுமார் யாதவ்
* சுப்மன் கில்
சி பிரிவு
* உமேஷ் யாதவ்
* ஷிகர் தவான்
* ஷர்துல் தாகூர்
* இஷான் கிஷன்
* தீபக் ஹூடா
* யுஸ்வேந்திர சாஹல்
* குல்தீப் யாதவ்
* வாஷிங்டன் சுந்தர்
* சஞ்சு சாம்சன்
* அர்ஷ்தீப் சிங்
* கே.எஸ்.பரத்
ஆகிய வீரர்கள் முறையே நான்கு பிரிவுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் புவனேஷ்குமார் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் காயத்தில் ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.