×

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 55 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 55 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதிகளைக் சேர்ந்த 55 மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு மீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 56 தமிழக மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 18 மற்றும் 20-ஆம் தேதிகளில் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 56 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை வைத்த நிலையில், மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , 55 Tamil Nadu fishermen released from Sri Lankan jails with conditions; Sri Lankan court order
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...