×

இயக்கத்துக்கு தேவை, கொடி பிடிக்கும் தொண்டர்களே தவிர, தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல; சசிகலா அறிக்கை

சென்னை: தொண்டர்கள் பிரதாப் சிங், ராஜேஷ் ஆகியோர் தாக்கப்பட்டது வேதனையளிக்கிறது என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். இனி என்னை போன்றவர்களால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. எந்த இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களை மதிக்க வேண்டும்.

கொடி பிடிக்கும் தொண்டர்கள்தான் தேவையே ஒழிய தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ராஜேஷ் எனும் தொண்டர் தாக்கப்பட்டது வேதனையளிப்பதாக கூறியுள்ளார். தொண்டர்களின் நலனின் அக்கறை செலுத்தும்போதுதான், அதிமுகவின் மீது நல்ல எண்ணம் உருவாகும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

ஒரு இயக்கத்துக்கு தேவை, கொடி பிடிக்கும் தொண்டர்களே தவிர, தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல எனக்கூறியுள்ள அவர், ஒன்றுமையுடன் இருந்தால் மட்டுமே எதிரிகளை வெல்ல முடியும் என்பதன் அவசியத்தை உணர வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். இன்று தொண்டர்களின் நிலையை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கண்ணீருடன் பார்த்து கொண்டிருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Sasikala , What the movement needs are flag-wielding volunteers, not stick-wielding thugs; Sasikala Report
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!