டெல்லி: நிதித் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்கு ஏராளமான வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். நிதித் தொழில்நுட்ப மாநாட்டை காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இந்தியாவில் ஏடிஎம் வாயிலான பணப்பரிவர்த்தனை அளவை செல்போன் வாயிலான பணப்பரிவர்த்தனை விஞ்சிவிட்டது என் அவர் கூறியுள்ளார்.