×

தமிழகத்தில் இன்று 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 1,341 பேர் டிஸ்சார்ஜ்: 14 பேர் பலி: சுகாதாரத்துறை அறிக்கை.!

சென்னை: தமிழகத்தில் இன்று 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.42 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.55 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1, 112 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 632 பேர் ஆண்கள், 480 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 96 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 791 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 306 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 14 பேர் உயிரிழந்துள்ளார். 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 9 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 033 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,341 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 47 ஆயிரத்து 504 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Health Department , In Tamil Nadu, 1,112 people have been diagnosed with corona infection today, 1,341 have been discharged and 14 have died.
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...