×

திருப்பூரில் அதிரடி: வாலிபரிடம் என்ஐஏ விசாரணை

திருப்பூர்:மதுரையை சேர்ந்த முகமது இக்பால் (29), ஐஎஸ்ஐஎஸ் மற்றும் ஹிஜாபுல் தாஹிர் ஆகிய அமைப்பிற்கு ஆதரவாகவும், மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாகவும்  கருத்துக்கள் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில் என்ஐஏ அதிகாரிகள் திருப்பூர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையத்தை சேர்ந்த 24 வயது வாலிபரிடமும் நேற்று முன்தினம் 8 மணி நேரம்  விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் கூறுகையில், மதுரையில் கைதான முகமது இக்பாலின் ‘‘வாட்ஸ் ஆப் குரூப்’ ஒன்றில் திருப்பூர் வாலிபர் இருப்பது தெரிந்தது. இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடந்தது என்றனர்.

Tags : Tirupur , Action in Tirupur: NIA probe into teenager
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...