தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை விரைவில் தொடங்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆலை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து இஸ்ரோ குழு நேரில் ஆய்வு செய்தது. தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய இஸ்ரோ நிபுணர்கள் குழு சில ஆலோசனைகளை வழங்கினர். இஸ்ரோ குழு வழங்கிய ஆலோசனைகளால் கோளாறை சரி செய்வதற்கு உதவிகரமாக இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.