×

வீடு இல்லாத ஏழைகள் இலவச வீட்டு மனையை பெற்று பயனடைய வேண்டும்: எம்எல்ஏ அப்பச்சு ரஞ்சன் ஆலோசனை

குடகு: வீடு இல்லாத ஏழைகள் அரசு கொடுக்கும் இலவச வீட்டுமனைகளை பெற்று பயனடைய வேண்டும் என்று எம்.எல்.ஏ அப்பச்சு ரஞ்சன் தெரிவித்தார். குடகு மாவட்டம் சோமவாரப்பேட்டையில் நடந்த வீடில்லாத பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ அப்பச்சு ரஞ்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் வீடுகள் இல்லாத ஏழைகள் மத்திய மாநில அரசின் சார்பில் அளிக்கப்படும் இலவச வீட்டு மனை திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இத்திட்டத்தின் மூலம் வருவாய்த்துறை சார்பில் சுமார் 92 பயனாளிகள் ேதர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பட்டா வழங்கப்பட்டுள்ளது. ேமலும் இதுபோன்ற சொந்த வீடில்லாத ஏழைகள் அரசின் திட்டத்தில் விண்ணப்பித்து பயனடைய ேவண்டும். இந்த திட்டத்தில் உண்மையான பயனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

Tags : Homeless poor should get free housing and benefit: MLA Apache Ranjan Advice
× RELATED 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க...