குமரி: குமரி மீனவர்களுக்கு சாட்டிலைட் போனை அரசு முழுமையாக தரவில்லை என தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஒப்புக்கொண்டுள்ளார். தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் குமரி தேங்காய்பட்டினத்தில் பேட்டியளித்தபோது இதை ஒப்புக்கொண்டார். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள 14 விசைப்படகுகளுக்கு தகவல் தரஇயலவில்லை என குமரி மாவட்ட ஆட்சியர் கூறிய நிலையில் தளவாய் சுந்தரம் ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.