மதுரை: தமிழகத்தில் பழமையான கல்வெட்டுகளை பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் எத்தனை மைசூரில் வைக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கெலவே எழுப்பினர். மைசூரில் உள்ள கல்வெட்டுகள், படிமங்களை வைக்க தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என மத்திய, மாநில தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 11 -ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.