சென்னை: வேகக்கட்டுப்பாட்டு கருவி தொடர்பான வழக்கில் போக்குவரத்துத்துறை செயலர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி வாகனங்களில் தமிழக அரசு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தவில்லை என கண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து, இன்றைய வழக்கு விசாரணையில் வருகின்ற பிப்ரவரி 15ம் தேதி போக்குவரத்துத்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.