×

திருக்கார்த்திகையையொட்டி அகல் விளக்கு விற்பனை மும்முரம்

மன்னார்குடி: தீபப் திருநாளான திருக்கார்த்திகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப் பட உள்ளதையொட்டி மன்னார்குடி பகுதியில் அகல் விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்துகார்த்திகை நட்சத்திரத்தன்று, அக்னி யாய் சிவந்து அறத்தைக்கூறிய சிவனின் தரிசனம் வேண்டி கொண்டாடப்படும் இத்திருநாளன்று விரதமிருந்து நெல்பொறி அல்லது அவல்பொறியை நைவே த்தியமாக படைத்து வீடு மற்றும் நாம் புழங்கும் இதர இடங்களில் விளக்கேற்றி வழிபடுவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், திருக்கார்த்திகை தீபப் திருநாள் வரும் ஞாயிற்றுக் கிழமை (நவ 29ம் தேதி) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி பெண்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவார்கள். குறிப்பாக வீட்டின் முன்புறம் மற்றும் மாடிப் பகுதிகளில் வரிசையாக அகல் விளக்குகளை அதிக எண்ணிக்கையில் ஏற்று வார்கள். மேலும், வணிக நிறுவனங்கள், கோயில்களில் அதிகளவிலான விளக்குகள் ஏற்றப்படும். சிவன் கோயில்களில் சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்வும் வெகு விமரிசையாக நடைபெறும். தீப திருநாளையொட்டி மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் கடை வீதிகளில் அகல் விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகளில் பலவிதமான அகல் விளக்குகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து அகல் விளக்கு விற்பனையில் ஈடுபட்ட பெண் கூறுகையில், தீப வழிபாடு இறைவனுக்கு பிடித்தமான ஒன்று என்பதால், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பெருமளவில் தினமும் பூஜை அறையில் தீபமேற்றி வழிபடுகின்றனர். திருக்கார்த்திகை நாளில் வீட்டையே கோவிலாக மாற்றும் வகையில் வீடு, வாசல் முழுதும் விளக்குகள் ஏற்றுகின்றனர். அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, மகாலட்சுமி விளக்கு, பஞ்சமுக விளக்கு, சர விளக்கு, என பல வகைகளில் விற்பனை செய்கிறோம். ரூ.6 முதல் 60 ரூபாய் வரை விளக்குகள் உள்ளன என்றார்.

Tags : Akal ,Thirukarthika , lamp sales high due to the upcoming festival of Thirukarthikai
× RELATED திருக்கார்த்திகையையொட்டி...