×

நிவர் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து..!

சென்னை: நிவர் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக தூத்துக்குடி, திருச்சி, பெங்களூரு, ஹீப்ளி, கோழிக்கோடு, மங்களூரு, விஜயவாடா, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லக்கூடிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல இந்த நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் 12 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, தற்போது முதற்கட்டமாக 24 விமானங்கள் சேவை மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், காலநிலைக்கு ஏற்ப கூடுதலாக விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே விமான சேவை குறித்த அறிவிப்புகளை தெரிந்து கொள்ள பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags : flights ,storm ,Chennai airport ,Nivar ,border , Nivar storm, Chennai, Airlines, cancellation
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...