மதுரை: 7.5% உள்ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அரசியல் அமைப்புப்படி நீதிமன்றத்துக்கு பதிலளிக்க தேவையில்லை என்றாலும் மனசாட்சியுடன் நடக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களால் உருவான மசோதாவுக்கு ஒப்புதல் தர அவகாசம் கேட்பது விசித்திரமானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.