×

சதுரகிரிக்கு செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி

வத்திராயிருப்பு: பிரதோஷம், பவுர்ணமியையொட்டி நாளை முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் 3 நாட்களும், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை பிரதோஷம், வரும் 30ம் தேதி பவுர்ணமி என்பதால், நாளை முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

நாளை முதல் விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சதுரகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து ஓடைகளில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்தால், பக்தர்களை அனுமதிக்க மாட்டார்கள். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்துள்ளனர்.

Tags : Sathuragiri , Sathuragiri
× RELATED சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு...