×

குண்டர்சட்டத்தில் 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள பகுதிகளில்  கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில்  அடைத்தனர். கும்மிடிப்பூண்டி, பஜார் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (32), ஜெகன் (26). இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

தற்போது மணிகண்டன், திருச்சி சிறைச்சலையிலும், ஜெகன், புழல் சிறைச்சாலையிலும் உள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் நேற்றுமுன்தினம் மணிகண்டன், ஜெகன் மீது குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிடப்பட்டது. கும்மிடிப்பூண்டி போலீசார் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

Tags : 2 arrested in thuggery case
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...