×

நாளை சாஸ்திரிபவன் முற்றுகை போராட்டம்: திருமுருகன் காந்தி அறிவிப்பு

சென்னை: மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடாளு மன்றத்தில் நிறை வேற்றப் பட்ட வேளாண் மசோதாக்களால் விவசாயம் முற்றிலுமாக அழியும். இந்த சட்டத்தால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படும். எனவே, வேளாண் சட்ட திருத்த மசோதவை திரும்ப பெறவேண்டும். இல்லை என்றால் புதன்கிழமை சாஸ்திரிபவன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : siege protest ,announcement ,Thirumurugan Gandhi , Shastripavan siege protest tomorrow: Thirumurugan Gandhi's announcement
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...