சென்னை: சென்னையில் அதிமுக அவசர உயர்நிலைக்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. அவசர உயர்நிலைக்குழு கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், பாண்டியராஜன் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.