×

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை இந்து அமைப்பினர் முற்றுகை

அண்ணாநகர்: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் தமிழக அரசு  தடை விதித்துள்ளது. இதை கண்டித்து தமிழக இந்து பரிவார் அமைப்பினர் 200க்கும் மேற்பட்டோர் நேற்று அண்ணா நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பொதுஇடங்களில்  விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவதற்கான தடையை அரசு நீக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த அண்ணா நகர் துணை ஆணையர் ஜவகர், உதவி கமிஷ்னர் பாலமுருகன் ஆகியோர் இந்து அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினர்.  இதனை அடுத்து, இந்து பரிவார் அமைப்பினர்  கலைந்து சென்றனர். இதனால்,  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : organizations ,Ganesha ,statue procession , Ganesha statue, Hindu system, siege
× RELATED கிழமைகள் தரும் கீர்த்தி