×

புதுச்சேரியில் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார்

புதுச்சேரி:  இந்திய நாட்டின் 74வது சுதந்திர தினம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு  மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அங்கு 8.30 மணிக்கு முதல்வர் நாராயணசாமி வந்ததும் தலைமை செயலர் அஸ்வினி குமார்,  டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் 8.55 மணிக்கு நாராயணசாமி தேசியக்கொடி  ஏற்றினார். அதன்பின், திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து, வீரதீர  செயல்புரிந்தவர்களுக்கான விருதுகள், பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags : Pondicherry ,Narayanasamy , Puducherry, Narayanasamy, National Flag
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...